உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெல்லம் விலை சரிவு விவசாயிகள் கவலை

வெல்லம் விலை சரிவு விவசாயிகள் கவலை

ப.வேலுார்: பரமத்தி வேலுார் வட்டாரத்தில், வெல்லம் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பரமத்தி வேலுார் வட்டாரத்தில் பாண்டமங்கலம், ஜேடர்பா-ளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, நன்-செய்இடையாறு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றை, கரும்பு ஆலை உரிமையாளர்கள் வாங்கிச் சென்று, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயார் செய்கின்றனர். உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல மார்க்-கெட்டில், சனி மற்றும் புதன்கிழமைகளில் விற்பனை செய்கின்-றனர்.நேற்று நடந்த ஏலத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வராததால், விலை சரிவடைந்தது.கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,440 ரூபாய்க்கும், அச்சு வெல்லம், 1,410 -ரூபாய் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம், ஒரு சிப்பம், 1,250 ரூபாய்க்கும், அச்சுவெல்லம், ஒரு சிப்பம், 1,200 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில், உருண்டை வெல்லம், 4,000 சிப்பங்களும், அச்சு வெல்லம் 1,000 சிப்பங்களும், ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டன. நேற்று நடந்த ஏலத்தில், 60 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.வெல்லம் விலை சரிவால், கரும்பு பயிரிட்ட விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ