மேலும் செய்திகள்
புதிய தொழிற்பள்ளி துவக்க விண்ணப்பிக்க அழைப்பு
10-Jan-2025
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு, 2025---26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஜன., 2 முதல் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்-பிக்கலாம். 2025-26ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அல-குகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்-பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்-டணம், 5,000 மற்றும் ஆய்வு கட்டணம், 8,000- செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.,28ம் தேதி. மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது இயக்குனரக மின்னஞ்சல் gmail.comமற்றும் 044-22501006 (113) என்ற தொலைபேசி மூலமாகவோ விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
10-Jan-2025