குமாரபாளையம் பகுதியில் கொடிக்கம்பம் அகற்றம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் அனைத்துக்கட்சி கொடிக்கம்பங்கள் அகற்றிய நிலையில், 100 அடி உயர கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி துவங்கியது.'அரசியல் கட்சியினர் பொது இடங்களில் நட்டு வைத்துள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்ற வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நகரில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர், தங்கள் கொடிக்கம்பங்களை, 33 வார்டுகளிலும் அகற்றினர். இதேபோல் கவுரி தியேட்டர் பகுதியில், 100 அடி உயரத்தில் பெரிய அளவிலான கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றும் பணி துவங்கியது. ராட்சத கிரேன்கள் கொண்டு, கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.