கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு அருவிகளில் குளிக்க வனத்துறை தடை
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்-றுலா பயணிகளின் வருகை அதிகம் காணப்படும். இங்கு வரும் பொதுமக்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்மரு-விகளில் குளித்து மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் கொல்லிம-லையில் பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்-டது.இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்க, வனத்துறையினர் தடை விதித்தனர். பின், மழை குறைந்-ததும், கடந்த, 5ல் மாசிலா அருவி, நம்மருவியில் குளிக்க, சுற்-றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டது. தற்போது, 2 நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், மாசிலா அருவி, நம்மருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் மீண்டும் வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று முதல்(13ம் தேதி) அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.