மேலும் செய்திகள்
துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ஒருவர் கைது
19-Oct-2024
எருமப்பட்டி: வடவத்துாரில், தீபாவளி செலவிற்காக மூதாட்டி-யிடம் நகையை பறித்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.எருமப்பட்டி யூனியன் வடவத்துாரை சேர்ந்தவர் லட்சுமி, 60. இவர் கடந்த, 22ல் வங்கியில் அடகு வைத்த, 2 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு வந்-துள்ளார். இவரை பின் தொடர்ந்த வாலிபர், மூதாட்டி அணிந்திருந்த செயினை பறித்து சென்றார். எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டதாரியான நந்தகுமார், 20, என்பவர் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.எருமப்பட்டி போலீசார் கூறியதாவது: படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த நந்தகுமார், தீபாவளி செலவிற்கு பணம் வேண்டும் என்-பதால், வங்கியில் இருந்து மூதாட்டி வெளியில் வரும் போது, நான் வீட்டில் கொண்டு வந்து விடு-கிறேன் என்று கூறி, நகையை பறிக்க முயன்றதா-கவும், அப்போது மூதாட்டி திட்டியவாறு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். பின் தொடர்ந்த நந்தகுமார் குடிக்க தண்ணீர் கேட்டு, மூதாட்டியிடம் நகையை பறித்து சென்-றது தெரியவந்தது. இதையடுத்து நந்தகுமாரை கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.
19-Oct-2024