கிராவல் மண் கடத்தல் பெயரளவுக்கு ஆய்வு
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவார-மான போடிநாய்க்கன்பட்டி பஞ்., மண்கரடு, கெஜ-கோம்பையில், தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் வெட்டி கடத்துவதா-கவும்; இதனால், கொல்லிமலையில் அதிக மழைப்பொழிவின்போது, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில், கடந்த, 12ல் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, அலங்காநத்தம் வருவாய் ஆய்-வாளர் ஜெயராமன், கெஜகோம்பை வி.ஏ.ஓ., பழனி உள்ளிட்ட அதிகாரிகள், மண் வெட்டிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அவர்கள் மண் வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யாமல், பெயரளவிற்கு ஓரிடத்தில் ஆய்வு செய்துவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினர்.மேலும், அதிகாரிகள் சென்றபோது, அவர்களின் எதிரிலேயே ஏராளமான லாரிகளில் மண் ஏற்றிக்-கொண்டு சென்றதால், இதைப்பார்த்த விவசா-யிகள் அதிர்ச்சியடைந்தனர்.