உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி விலை சரிவு கிலோ ரூ.300க்கு விற்பனை

குண்டுமல்லி விலை சரிவு கிலோ ரூ.300க்கு விற்பனை

ப.வேலுார், ப.வேலுார் பகுதியில் உள்ள சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம் சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. வெயில் அதிகரித்துள்ளதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று மல்லிகை பூ வரத்து அதிகமானது. நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம், 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி, நேற்று 300 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 80 ரூபாய், 200 ரூபாய்க்கு விற்ற அரளி, 100 ரூபாய், 200 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 100 ரூபாய்க்கும் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை