உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழகம், கேரளாவில் முட்டை விலை உச்சத்தை தொட்டதால் மகிழ்ச்சி

தமிழகம், கேரளாவில் முட்டை விலை உச்சத்தை தொட்டதால் மகிழ்ச்சி

நாமக்கல்: தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது, 2024 டிச., 9ல் உச்சத்தை தொட்ட நிலையில், இரண்டாம் முறையாக உச்சத்தை எட்டியதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 585 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 590 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீதோஷ்ண மாற்றம் காரணமாக, நுகர்வு அதிகரித்துள்ளதால் முட்டை விலை உயர்ந்து வருகிறது.கடந்த 2024, டிச., 9ல், முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக, 590 காசு நிர்ணயம் செய்யப்பட்டிருந்-தது குறிப்பிடத்தக்கது. தற்போது, முட்டை கொள்முதல் அதே விலையை எட்டி உள்ளதால், மேலும் அதிக-ரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 650, ைஹதராபாத், 600, விஜயவாடா, 600, பர்வாலா, 618, மும்பை, 665, மைசூர், 643, பெங்களூரு, 640, கோல்கட்டா, 685, டில்லி, 650 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 106 ரூபாய்க்கும், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்-டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி