உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்

மானாவாரி நிலத்தில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடை தீவிரம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்க-டலை பரப்பளவில், பாதிக்கு மேல் மானாவாரியாக பயிரிட்டுள்-ளனர். கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால், மானாவாரி கடலை விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு பூ விட்டு காய்க்கத்தொடங்கி-யது. இந்நிலையில், கடந்த வாரம் மானாவாரியில் பயிரிட்டிருந்த கடலை அறுவடை தொடங்கியது. 46 கிலோ மூட்டை, 3,800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விலையும் கூடுதலாக இருப்-பதால், விவசாயிகள் வேகமாக அறுவடை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்கள் தாமதித்தால், கடலைகள் செடியாக முளைக்கும் சூழல் உள்ளதால், தற்போது கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர். இதனால், நாமகிரிப்-பேட்டை, அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூலி ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ