உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் கன மழை

குமாரபாளையத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் கன மழை

குமாரபாளையம் குமாரபாளையத்தில், 2 மணி நேரம் தொடர்ந்து கன மழை பெய்தது.குமாரபாளையத்தில், இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவினாலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை, 3:00 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. குமாரபாளையம் மற்றும் காவேரி நகர். சின்னப்ப நாயக்கன் பாளையம், தெற்கு காலனி. குப்பாண்டபாளையம், சாணார்பாளையம் மற்றும் தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து, 2 மணி நேரம் கன மழை செய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ