உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

நாமக்கல், சென்னையில் நடைபெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டது.நாமக்கல்லில், காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி.,யின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநில மாநாடு வரும், 16ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, அமைப்புசாரா தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என, அதன் கிழக்கு மாவட்ட தலைவர் தனலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ