கலியனுார் பஞ்.,ல் மாஸ் கிளீனிங்
'பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட கலியனுார் பஞ்சாயத்து குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குப்பை, கழிவு, பாலிதீன், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடந்தன.இதனால் சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. நேற்று பஞ்., முழுவதும் மாஸ் கிளீனிங் பணி நடந்தது.இந்த மாஸ் கீளினிங் பணியில் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன.மேலும், வடிகாலில் கழிவுநீர் சீராக செல்ல, வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை அகற்றினர்.தொடர்ந்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.