உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

தொடர் மழையால் கொடிவேரி வெறிச்

கோபி, டிச. 2-கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை நாட்களில், அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்தனர். இதனால் களை கட்டும் தடுப்பணை வளாகம், வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழை பெய்வதே இதற்கு காரணம். சுற்றுலா பயணிகளை நம்பி, பவானி ஆற்று பாலத்துக்கு அடியில், பொறித்த மீன் விற்பனை நடக்கிறது. மீன்களை ரோஸ்ட் செய்து, மூன்று துண்டுகள் நுாறு ரூபாய்க்கும், மீன் குழம்புடன் சாப்பாடு, 50 ரூபாய்க்கும் விற்கின்றனர். குறைவான பயணிகளே வந்ததால், இவர்களின் வியாபாரம் வெகுவாக பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ