உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வரும் 4ல் கும்பாபிஷேக விழா

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் கிராமத்தில் வேதநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வரும் செப்., 4ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதையொட்டி, இன்று இரவு கிராம சாந்தி நடக்கிறது. செப்., 2 காலை, காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்க உள்ளது. 3 காலை, இரண்டாம் கால யாக பூஜை துவங்குகிறது.அன்று மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை துவங்குகிறது. 4 காலை, நான்காம் கால யாக பூஜை துவங்குகிறது. அன்று காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் விநாயகர், வேதநாயகி அம்மாள் சமேத தான்தோன்றீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அன்று மாலை, 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை