உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு

நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் மானாவாரி நிலக்கடலை பயிரில் இலை சுருட்டுப்புழு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் புதுச்சத்திரம், சேந்தமங்கலம், சிங்களாந்தபுரம், கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், பாச்சல், கண்ணுார்-பட்டி, கல்யாணி, பட்டணம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதி-களில், மானாவாரி விவசாயிகள் தங்களது நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்க-டலை செடியில் தற்போது இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிக-ரித்துள்ளது. இதனால் அனைத்து செடிகளிலுமே நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து நன்கு வளர்ந்த செடிகள் தற்போது காய்ந்து கருகியது போல் காணப்படுகிறது. இலை கருகியுள்-ளதால், கடலை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. சில விவசா-யிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்து தெளித்ததால், பாதிப்பு குறைவாக உள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள வயல்-களில் விளைச்சல் மிகவும் குறையும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி