மேலும் செய்திகள்
நெய்வேலியில் மா.கம்யூ., நகர மாநாடு
22-Oct-2024
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், நேற்று மா.கம்யூ., கட்சியின் சந்தா வழங்கும் பேரவை கூட்டம் நடந்தது.கிழக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்-பினர் சக்திவேல் தலைமை வகித்தனர். மேற்கு ஒன்றிய செய-லாளர் ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பழனியம்மாள் முன்-னிலை வகித்தனர்.இதில், செக்காரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். அரசு பஸ்களில் ஏறும் மாணவர்களை, வேறு ஊர்களில் இறக்கி விடும் டிரைவர், கண்டக்டர் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி, வரும், 9ல் மா.கம்யூ., கட்சி சார்பில் உண்-ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன், மாவட்ட செய-லாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், தமிழ்மணி, சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
22-Oct-2024