நகராட்சி பணியாளர் மயங்கி விழுந்து பலி
குமாரபாளையம்: குமாரபாளையம், ராஜாஜி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 58; இவர், குமாரபாளையம் நகராட்சியில் தண்ணீர் திறந்துவிடும் பணி செய்து வந்தார். தினமும் இரவு, தண்ணீர் திறந்து விடும் பணிக்கு சென்று விட்டு, மறுநாள் காலை தான் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை, குமார பாளையம் அரசு பி.எட்., கல்லுாரி அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் தண்ணீர் திறந்துவிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.