நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு: கட்சியினருக்கு அழைப்பு
நாமக்கல், 'நாளை, தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதில், கட்சியினர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்' என, கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நாளை காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தொகுதி பார்வையாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், பிரியதர்ஷினி, முனவர்ஜான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.கூட்டத்தில், 'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் படிவம் வழங்குதல், கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதில், முன்னாள் எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.