சிறுமியிடம் சில்மிஷம் ஒடிஷா வாலிபர் சிக்கினார்
ப.வேலுார்:சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஒடிஷா வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஒடிஷா மாநிலம், ராதா நகரை சேர்ந்தவர் ஆஷாயா கயா. இவரது மகன் ராஜேஷ், 37, சில ஆண்டுகளுக்கு முன் வேலை வாய்ப்பு தேடி, நாமக்கல் வந்தார். தற்போது இவர், வேலகவுண்டம்பட்டி அருகே சிங்கிலிப்பட்டியில் சொந்தமாக பேப்பர் அட்டை தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமிக்கு, சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம், கடைக்கு தனியாக சென்ற சிறுமியிடம் , சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, வேலகவுண்டம்பட்டி போலீசார், போக்சோவில் ராஜேஷை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.