பள்ளிப்பாளையம் பகுதியில் நெல் நடவு பணிகள் துவக்கம்
பள்ளிப்பாளையம் பகுதியில்நெல் நடவு பணிகள் துவக்கம்பள்ளிப்பாளையம், செப். 28-பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், நெல் நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், ஆண்டுதோறும் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதனை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பள்ளிப்பாளையத்தில் மோளகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, சின்னார்பாளையம், தெற்குபாளையம், களியனுார், சமயசங்கிலி, ஆலாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்தாண்டு கடந்த ஜூலை, 31 முதல் பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. டிச., 31 வரை தண்ணீர் வரும். இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பணியாக, வயல் வெளிகளில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை உழவு செய்து, வரப்பை சீரமைத்தனர். தற்போது நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.வாய்க்காலில் தண்ணீர் வருவதாலும், பருவமழை பெய்து வருவதாலும், இந்தாண்டு நெல்சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.