மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
29-Oct-2024
நாமக்கல், நவ. 12-நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், 431 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, தாட்கோ சார்பில், 18 பேருக்கு, 37.56 லட்சம் ரூபாய் மதிப்பில், தொழில் கடனுதவி, கூட்டுறவுத்துறை சார்பில், 5 பேருக்கு, 3.45 லட்சம் ரூபாய் மதிப்பில், வட்டியில்லா பயிர் கடனுதவி வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர் உமா, 3 பேருக்கு, ப்ரெய்லி கை கடிகாரம், கல்வி உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கிற்கு உதவித்தொகை என, மொத்தம், 34 பேருக்கு, 41.46 லட்சம் ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Oct-2024