உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்

ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம்

ராசிபுரம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் படங்களை மாட்டலாம் என, அரசாணை உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் பிரதமர் படத்தை மாட்ட மறுத்து வருகின்றனர். ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என, பா.ஜ., நிர்வாகிகள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இந்நிலையில் ராசிபுரம் ஒன்றியம், முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில், நேற்று பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன் தலைமையில், பா.ஜ., தொண்டர்கள், முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே, பிரதமர் மோடியின் படத்தை மாட்டினர். இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் பிரதமர் படம் மாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லோகேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ