மேலும் செய்திகள்
மின்தடை ரத்து அறிவிப்பு
23-Sep-2025
ப.வேலுார், பரமத்தி வேலுாரில், இன்று மின்தடையை ரத்து செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.பரமத்தி வேலுார், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனுார், சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் இன்று காலை (18) 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் அறிவித்திருந்தனர்.தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடை சிறு வியாபாரிகள் துணிக்கடைகள், பேக்கரி மற்றும் பலகார கடைகளில் விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் மின்தடை என மின்வாரியம் அறிவித்ததால், வர்த்தகம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மின்தடையை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் சார்பில், ப.வேலுார் நகர அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுந்தரம் கோரிக்கை விடுத்தார். மேலும் இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, பரமத்தி வேலுார் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் இன்று அறிவித்திருந்த மின்தடையை மின்வாரியத்தினர் ரத்து செய்துள்ளனர். வழக்கம்போல் மின்வினியோகம் இன்று இருக்கும் என தெரிவித்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
23-Sep-2025