மேலும் செய்திகள்
பழைய இடத்திலேயே பஞ்., ஆபீஸ் செயல்பட மனு
02-Apr-2025
வெண்ணந்துார்:'ஆலாம்பட்டி கிராமத்தில் சேதமடைந்துள்ள பஞ்., அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெண்ணந்துார் அருகே, ஆலாம்பட்டி பஞ்., அலுவலக கட்டடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நுாலக கட்டடத்துக்கு, பஞ்., அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. சேதமடைந்த பஞ்., அலுவலகத்துக்கு பதிலாக, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அலுவலகம் செயல்படும் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய அலுவலகம் விரைந்து கட்ட வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, சேதமான பஞ்., அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Apr-2025