உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்

நாற்றங்கால் பண்ணை பராமரிக்க வேண்டுகோள்

எருமப்பட்டி: நாமக்கல் - துறையூர் சாலை, ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, எருமப்-பட்டி யூனியனில் இருந்தபோது, கூலிப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கடந்த, 2022ல் மரக்-கன்றுகள் வளர்ப்பதற்காக நாற்றங்கால் நடவு பண்ணை அமைக்-கப்பட்டது. இந்த பண்ணையில் புளியம், வேம்பு, ஆலமரம் உள்-ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வந்தன.சில மாதங்களுக்கு முன் ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து, நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால், இந்த நாற்றங்கால் பண்ணை வீணாகி வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம், இந்த நாற்றங்கால் பண்ணையை பராமரித்து மீண்டும் பயன்ப-டுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ