உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் பறிமுதல்

வாடகைக்கு பயன்படுத்திய சொந்த கார் பறிமுதல்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் வாடகைக்கு பயன்படுத்திய சொந்த காரை, குமாரபாளையம் போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பாலம் சாலையில் நேற்று மாலை, 6:00 மணிக்கு குமாரபாளையம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, ஈரோட்டை நோக்கி சென்ற காரை நிறுத்தி தணிக்கை செய்யப்பட்டது. அதில், கார் சொந்த பயன்பாட்டிற்கு என தெரியவந்தது. ஆனால் வாடகைக்கு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்க பள்ளிப்பாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை