புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
நாமக்கல்: புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்-தது. நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்மர், நாமகிரித்தாயார் கோவில் எதிரே, ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ஒரே கல்லால் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்றபடி வணங்கிய நிலையில், சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார். இங்கு, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருடப்பிறப்பு, தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.அதன்படி, புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மாலை அலங்-காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்-தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்-பட்டு, மகா தீபாராதனை நடந்தது. புரட்டாசி ஞாயிறு என்பதால், வழக்கத்தை விட நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.