வரும் 12ல் இ.பி.எஸ்., பிறந்த நாள் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல், மாநகர அ.தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் மாவட்ட பஞ்., தலைவர் காந்திமுருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும், 12ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளை, நாமக்கல் நகரில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமையில், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், தங்க தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அன்றைய தினம், இந்திய ராணுவ வீரர்களுக்கு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நாமக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா செல்வகுமார், புதுச்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத், மோகனுார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மோகனுார் நகர செயலாளர் ராஜவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.