வெப்படை பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதியின்றி அவதி
வெப்படை பஸ் ஸ்டாப்பில்குடிநீர் வசதியின்றி அவதிபள்ளிப்பாளையம், அக். 10-பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பஸ் ஸ்டாப்பிலிருந்து தினமும் ஏராளமான பொது மக்கள், மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தாகம் எடுத்தால் அருகில் உள்ள கடையில் பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தையுடன் வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.நாளுக்குநாள் வெப்படை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், குடிநீர் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.