கோவில் நிலம் ஆக்கிரமிப்பு வீட்டை பூட்டி சீல் வைப்பு
கோவில் நிலம் ஆக்கிரமிப்புவீட்டை பூட்டி 'சீல்' வைப்புகுமாரபாளையம், நவ. 28-குமாரபாளையம், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில், அனுமதியின்றி வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று முன்தினம் வீட்டை காலி செய்ய வைத்தனர். தொடர்ந்து அந்த வீட்டின் கதவை பூட்டி, 'சீல்' வைத்தனர். உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் சுந்தரவல்லி, உதவி கலெக்டர் குப்புசாமி, வி.ஏ.ஓ., அரசு, செயல் அலுவலர் குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.