தீர்த்தக்குட ஊர்வலம்
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் கூலகருப்-பணார், சித்தி விநாயகர் மற்றும் நவகிரக சிலைக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. முன்னதாக, நேற்று மாலை பெண்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் மேளதாளம் முழங்க, குதிரை-யுடன் பக்தர்கள் பட்டணம் காளியம்மன் கோவிலிலிருந்து முக்-கிய வீதிகள் வழியே சென்று கோவிலை அடைந்தனர். பின் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டணம், வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி-களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காலை, கல-சங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.