கலப்பட பொருள் விற்றவர்கள் கைது
ராசிபுரம்: மும்பையை சேர்ந்தவர் மணிமாறன், 72; சேலம், கன்னங்குறிச்-சியில் உள்ள அறிவுசார் சொத்து உரிமை அமலாக்க பிரிவு போலீ-சாரிடம், நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், 'நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா, தங்கம் மளிகை கடை மற்றும் கார்கூடல்பட்டி பிரகாஷ் மளிகை கடை-களில், பிரபல பொருட்களின் பெயரில் போலி லேபிள்கள் ஒட்டி கலப்பட பொருட்களை விற்று வருகின்றனர். அவர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்' எனக்கேட்டுக்கொண்டார். இதைய-டுத்து, இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட கடைகளில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்-டனர். இதில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்ளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைய-டுத்து மெட்டாலா தங்கம் மளிகை கடை உரிமையாளர் தங்கராஜ், 45, கார்கூடல்பட்டியை சேர்ந்த பிரகாஷ், மளிகை கடை உரிமை-யாளர் ஹரிபிரசாத், 30 ஆகியோரை கைது செய்து அழைத்து சென்றனர்.