உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நடைபயிற்சி சென்ற தம்பதி உட்பட மூவர் விபத்தில் பலி

நடைபயிற்சி சென்ற தம்பதி உட்பட மூவர் விபத்தில் பலி

மோகனுார்: நாமக்கல் மாவட்டம், மோகனுார், ராசிபாளையம் பஞ்., ஏரியூரார் தோட்டம், காட்டூரை சேர்ந்தவர் மலையண்ணன், 70; ஓய்வு பெற்ற மின் ஊழியர். இவரது மனைவி நிர்மலா, 55. தம்பதியின் மகன், மகள் கனடாவில் உள்ளனர்.காட்டூரைச் சேர்ந்தவர் செல்லம்மாள், 65. இவருடன், மலையண்ணன், நிர்மலா தம்பதி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நாமக்கல் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மோகனுார், பாம்பாட்டி தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி மணிகண்டன், நாமக்கல்லில் மீன் வாங்கி, ஆம்னி வேனில் மோகனுார் திரும்பினார்.காட்டூர், உப்பாத்து பாலம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, மூவர் மீதும் மோதிய வேன், சாலையோர பெயர் பலகை கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், மலையண்ணன், நிர்மலா, செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மணிகண்டன், நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை