உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை

மனைவியுடன் ரயிலில் பாய்ந்து திருச்சி ஆர்.டி.ஓ., தற்கொலை

நாமக்கல்: திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நாமக்கல், மோகனுார், அன்பு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன், 56; வட்டார போக்குவரத்து அலுவலராக திருச்சியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா, 51; மோகனுார் ஒன்றிய ஆண்டாபுரம் பஞ்., துவக்கப்பள்ளி ஆசிரியை. இந்த தம்பதியின் மகள் சம்யுக்தா, 25; வெளிநாட்டில் எம்.பி.ஏ., படித்து முடித்துள்ளார். மகன் ஆதித்யா, 21; எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார்.நேற்று அதிகாலை, சுப்ரமணியன், பிரமிளா, நாமக்கல் - மோகனுார் சாலையில் வகுரம்பட்டி அருகே ரயில் பாதையில், சரக்கு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.சுப்ரமணியன் தலை துண்டிக்கப்பட்டும், பிரமிளா உடல் சிதைந்தும் பலியாகினர். சேலம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரயில்வே போலீசார் கூறுகையில், 'சம்யுக்தா ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு, பெற்றோர் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்தே தம்பதி ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை