உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு

வழக்கில் சிக்கிய வாகனம்: திரும்ப பெற அழைப்பு

குமாரபாளையம்: குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், பல்-வேறு விபத்து வழக்கு சம்பந்தமாக ஏராளமான டூவீலர்கள் பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் வளா-கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கட்-டுமான பணிகள் நடந்து வருவதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர்கள், போலீஸ் ஸ்டேஷன் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டி-ருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் போலீஸ் ஸ்டேஷன் பணிகளுக்காக வரும் பொதுமக்கள், தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், எதிர் திசையில் உள்ள வணிக நிறுவனங்கள் முன் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்-பட்டு வருகிறது. இதனால், வணிக நிறுவனத்தா-ருக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வழக்கு சம்பந்தமாக வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்தால், அதனை உரிய ஆவ-ணங்கள் கொடுத்து திரும்ப பெற்றுக்கொள்ளு-மாறு, இன்ஸ்பெக்டர் தவமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !