குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி உதவித்-தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 418 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்-றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்க-ளிடம் வழங்கி, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொழிலாளர் நலத்துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் அரசு மருத்துவ கல்-லுாரியில் மருத்துவ படிப்பு பயில்வதற்கு, தலா, 50,000 வீதம், 9 பேருக்கு, 4.50 லட்சம் ரூபாய்க்கான கல்வி உதவித்தொகை வழங்-கப்பட்டது.டி.ஆர்.ஓ., சுமன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்-துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.