உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

மல்லசமுத்திரம் ராசிபுரம்-திருச்செங்கோடு நெடுஞ்சாலையில், மல்லசமுத்திரம் யூனியன், கோப்பம்பட்டி பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும், 500க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் என, ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், ஈரோடு, சேலம் என பல்வேறு பகுதிகளுக்கு வேலை நிமித்தமாகவும், பள்ளி கல்லுாரிகளுக்கும் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் மக்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சிலர், வெப்பம் தாங்க முடியாமல் மயக்கமடைகின்றனர். இதுவரை இங்கு பயணியர் நிழற்கூடம் அமைக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, பஸ் ஸ்டாப்பில் பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ