உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊசிமலை பகுதியில் சேதமடைந்துள்ள சாலை: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ஊசிமலை பகுதியில் சேதமடைந்துள்ள சாலை: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கூடலுார்: கூடலுார் ஊசிமலை -தொரப்பள்ளி இடையே சேதமடைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார்- - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் சென்று வருகின்றனர்.இச்சாலையில், ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரையிலான, 16 கி.மீ., துார சாலை பல இடங்களில் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையில், சுற்றுலா வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவமும் நடந்து வருகிறது.இந்நிலையில், கூடலுார் நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரி சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில், 'சாலை சீரமைக்க திட்ட மதிப்பீடு அரசு அனுப்பப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் சாலை பணிகள் துவங்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், போராட்டம், தற்காலிகமாக கைவிடப்பட்டது.அதன்பின், இப்பகுதி சாலையை சீரமைப்பு தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. சீசன் துவங்க உள்ள நிலையில், ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'முக்கிய சுற்றுலா தளமான ஊட்டிக்கு, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் கூடலுார் வழியாக நெடுஞ்சாலையில் வந்து செல்கின்றனர். சேதமடைந்துள்ள இப்பகுதி சாலையை கடந்து செல்வதில், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், சேதமடைந்துள்ள சாலையை கோடை சீசனுக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை