மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் பிற சுற்றுலா ஸ்தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க செல்வது வழக்கம். தொட்டபெட்டா மலை சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். கடந்த, 10 ம் தேதி முதல், 14 ம் தேதி வரை, 45 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
03-Oct-2025