மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
16-Apr-2025
குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு சித்திரை தேர் திருவிழா கடந்த, 4ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. நேற்று குன்னுார் தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 99 வது ஆண்டு திருவிழா நடந்தது. காலை சந்தான வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து, சீர் தட்டு ஊர்வலம் புறப்பட்டு, தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, பரிவேட்டை நிகழ்ச்சிகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு தேர் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை தையல் தொழிலாளர்கள் பரிவேட்டை உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.
16-Apr-2025