உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில தடகள போட்டிக்கு நீலகிரியில் வீரர்கள் தேர்வு

மாநில தடகள போட்டிக்கு நீலகிரியில் வீரர்கள் தேர்வு

ஊட்டி; தடகள போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யும் பணி வரும், 20ம் தேதி நடக்கிறது நீலகிரி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை: நீலகிரி மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் இம்மாதம், 20ம் தேதி முதல் ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி., திறந்தவெளி விளையாட்டரங்கில் நடக்கிறது. அதில், 14,16,18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட உள்ள நபர்கள், செப்., மாதம், சென்னை வண்டலுார், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடக்க உள்ள மாநில அளவிலான, ஜூனியர் தடகள போட்டி, தேசிய ஜூனியர் தடகள போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மேலும், விவரங்களுக்கு, 94430 66112 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி