உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்

விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்

குன்னூர்; அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி அ விட்டம் விழா நடந்தது. நம் நாட்டில் பிராமணர்களின் மிக முக்கிய வேத சடங்கு நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இதை 'உபகர்மா' எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பூணுால் மாற்றி கொள்வது மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது. வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இந்நிலையில், குன்னுார் அருகே அருவங்காடு விநாயகர் கோவிலில் நேற்று ஆவணி அவிட்டம் விழா நடந்தது. விழாவில், அருவங்காடு, குன்னுார், ஊட்டி, வெலிங்டன் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பூணுால் அணிந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டு, காண்டரிஷி தர்ப்பணம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிராமணர் சங்க தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். கோவில் அர்ச்சகர் மகேஷ்வரன் பூஜைகளை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி