சாலையில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறு
கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு இடையே, 'கால்ப்லிங்ஸ்' அருகில், அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில், கால்நடைகள் உலா வருவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இச்சாலையில், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. கூட்டமாக வரும் கால்நடைகள், சாலையோ ரத்தில் புற்களை மேய்வதுடன், பெரும்பாலான நேரங்களில் சாலையில் படுத்து விடுகின்றன. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியம்.