உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

ஊட்டி: ஊட்டி இத்தலார் ஊராட்சியில், 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணி கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. 'சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நுாலகம், 4 லட்சம் மதிப்பீட்டில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, சமுதாய கூடம் அருகில் கட்டப்பட்ட மேற்கூரை, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட மேற்கூரை,' என, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ