உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

தேர்தல் விதியால் பணம் பறிமுதல்: கதறி அழுத பஞ்சாப் பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: பஞ்சாபில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் வைத்திருத்த ரூ. 69 ஆயிரத்து 400 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பணத்தை திருப்பிக் கேட்டு வடமாநில பெண் கதறல் அழும் வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விமானத்தில் கோவை வந்து, அங்கிருந்து காரில் வந்த ஒரு குடும்பத்தினர், உரிய ஆவணங்கள் இன்றி 69,400 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.பின்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண், “நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இந்த நடைமுறை தெரியாது. இப்போது கையில் செலவிற்கு கூட பணமில்லை. அதனால் எங்களது பணத்தை திரும்பக் கொடுங்கள்” எனக் கேட்டு கதறி அழுதார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Devan
மார் 26, 2024 14:36

கட்டு கட்டாக பணம் வைத்துக் கொண்டு பட்டுவாடா செய்பவரை விட்டு விடுவார்கள் மக்களின் பணத்தை பிடுங்கிக் கொண்டு நாங்கள் கோடிகளில் பணம் பறிமுதல் செய்தோம் என்று விளம்பரம தேடும் ....


Hariprasad
மார் 25, 2024 22:49

அந்த அதிகாரிக்கு தெரியாதா அது நல்ல பணமா இல்லை வேற ஏதாவது பணமா என்று, ஏன் எதற்காக இந்த நாடகம் யாரை ஏமாற்றுவதற்காக, பாவம் அந்த குடும்பம்..


Krishnamurthy Venkatesan
மார் 25, 2024 19:26

Authorities should consider natural justice/common sense


கனோஜ் ஆங்ரே
மார் 25, 2024 16:44

ஒரிஜினல் திருடென விட்டுட்டுவாங்க


ஆசாமி
மார் 25, 2024 15:35

இந்த பாவம் சும்மா விடாது


kumarkv
மார் 25, 2024 15:08

This is typical of Tamil Nadu police They will leave All political culprits and catch hold of innocent people They know very well they came to visit this shitty Ooty for tourism even though there better places in India but trying to extract bribe from this tourist


SUNDARARAMAN K
மார் 25, 2024 15:07

ஏடிஎம், கிரெடிட் கார்டு, மொபைல் யுபிஐ என பண பரிவர்தனைக்கு பல வழிகள் இருக்கும் இக்காலத்தில் இவர்கள் ரொக்கமாக இவ்வளவு பணம் கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை பஞ்சாபில் இவர்கள் செய்யும் தொழிலில் பெற்ற கணக்கு காட்டாத கருப்பு பணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது


keerthanadmr
மார் 25, 2024 15:03

It is sad to see her crying


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை