உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அலுவலகத்தில் சிறுத்தை நடமாட்டம்: ஊழியர்கள் அச்சம்

அலுவலகத்தில் சிறுத்தை நடமாட்டம்: ஊழியர்கள் அச்சம்

கோத்தகிரி:கோத்தகிரி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் சிறுத்தை நடமாடியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக, கரடி, சிறுத்தை, காட்டெருமை மற்றும் பன்றி உள்ளிட்ட, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது தொடர்கிறது. இந்நிலையில், கோத்தகிரி சக்திமலை சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் சிறுத்தை நடமாடியுள்ளது. ஒரே இடத்தில் அங்கும் இங்கும் சென்ற சிறுத்தை, ஒரு வழியாக அங்குள்ள புதருக்குள் மறைந்துள்ளது. சிறுத்தை நடமாட்டம்,அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சி.சி.டி.வி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த அலுவலர்கள் மற்றும் மக்கள் கொடுத்த தகவலின்படி, அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை