உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முன்னாள் ராணுவ வீரர்கள் ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் ராணுவ வீரர்கள் ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி,; முன்னாள் ராணுவ வீரர்கள் மாஜி அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீலமலை முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் இரவு பகலாக போராடி கொண்டிருக்கும், இந்திய ராணுவ வீரர்களை போற்றும் வகையில் பல்வேறு அமைப்பினர் பாராட்டி வருகின்றனர்.அதே வேளையில், அ.தி.மு.க., மாஜி அமைச்சர் செல்லுார் ராஜு , ஆபரேஷன் சிந்துார் குறித்து இழிவாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து , கலெக்டர் அலுவலக எதிரே கண்டன கோஷங்கள் எழுப்பினர்.சங்க தலைவர் கூறுகையில்,' ஆபரேஷன் சிந்துார் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் குறித்து இழிவாக பேசிய மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு , பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ