உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிர்ணயம்

பசுந்தேயிலைக்கு ரூ.23.43 விலை நிர்ணயம்

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோவுக்கு, 23.43 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.குன்னுார் தேயிலை ஏல மையம் மற்றும் 'இன்கோசர்வ்' மையத்தில் வாரந்தோறும் தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலையின் அடிப்படையில், மாதந்தோறும் தேயிலை வாரியம் சார்பில் பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதன்படி, நீலகிரியில் சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியான தேயிலை துாள் செப்., மாதம் ஏலம் விடப்பட்டதன் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலைக்கான விலையை, குன்னுாரில் உள்ள தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது. தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறுகையில், ''செப்., மாதத்திற்கான பசுந்தேயிலை கிலோ, 23.43 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை