மேலும் செய்திகள்
ஊட்டி கேரட் விலை ஒரே நாளில் திடீர் உயர்வு
02-Nov-2024
கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் கேரட் அறுவடை செய்வதில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு, கேரட் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, வ.உ.சி., நகர், ஈளாடா, கட்டபெட்டு, கூக்கல்தொறை, ஊட்டி பகுதியில், எம். பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, துானேரி, குனனுார் பகுதியில், பந்துமி மற்றும் கொலக்கம்பை பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் கேரட் மகசூல் அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு கிலோ கேரட், மேட்டுப்பாளையம் மண்டிகளில், தரத்திற்கு ஏற்ப, 70 முதல், 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் கடைகளில், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களை காட்டிலும், கேரட் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது, மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கேரட் தோட்டங்களில், தண்ணீர் தேங்கி, அழுகிவிடும் வாய்ப்புள்ளது. இதனால், தயாரான கேரட்டை படிப்படியாக அறுவடை செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில், ''ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், கேரட் வரத்து குறைந்துள்ளது. ஊட்டி மண்டிகளில், 5000 முதல், 10 ஆயிரம் கிலோ வரை வரத்து உள்ளது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளை காட்டிலும், ஊட்டி மார்க்கெட்டில், ஒரு கிலோ கோட், 70 முதல். 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.
02-Nov-2024