உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடநாடு கொலை வழக்கு அக். 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை வழக்கு அக். 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோத்தகிரி: கோத்தகிரி கோடநாடு கொலை; கொள்ளை வழக்கு விசாரணையை, அக்., 25ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ், நேற்று கோர்ட்டில் ஆஜரானார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராயினர்.மேலும், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேரில் வருகை புரிந்தனர். நீதிபதி லிங்கம் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 'இன்டர் போல் விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை,' என, நீதிபதியிடம் அரசு வக்கீல்கள் தெரிவித்ததை அடுத்து, விசாரணையை அக்., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ